இளம்பெண் உயிரிழந்த வழக்கு- சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்ககோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

Default Image

இளம்பெண் சசிகலா உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமென அவரது தாயார் உயர் நீதிமன்றத்தில் மனு தொடர்ந்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் உள்ள சசிகலா என்ற இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் திமுக நிர்வாகி உட்பட ஒருவருக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. இந்த வழக்கில் ஒருவர் போலீசாரிடம் சரணடைந்தார்.

இதில் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகியான தேவேந்திரனை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் அவரை சென்னை வியாசர்பாடியில் கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த பெண்ணின் தாயார் சந்திரா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை தப்பிக்கவைக்க போலீசார் முயற்சித்து வருவதாகவும் அந்த பெண்ணின் தாயார் புகாரளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்