நளினி தாக்கல் செய்த மனு ! தீர்ப்பை தேதி குறிப்படாமல் ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

Default Image

நளினி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்படாமல் ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்கூட்டியே  விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்  ஏழு பேர் விடுதலை தொடர்பாக அளித்த மனுவை பரிசீலிக்க கோரி நளினி மனு தாக்கல் செய்தார்.இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.அதில்,  7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என்று விளக்கம் அளித்தது. இறுதியாக நளினி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்படாமல் ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்