“எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு போர்த்தியவர் கொரோனாவை விட மோசமான விஷக்கிருமிகள்”- அமைச்சர் கடம்பூர் ராஜூ!

Default Image

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு போர்த்தியவர் கொரோனாவை விட மோசமான விஷக்கிருமிகள் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கண்டனம் தெரிவித்தார்.

எம்ஜிஆர் சிலை மீது காவி துண்டு போர்த்திய செயலுக்கு அதிமுக பிரமுகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நேற்று முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பழனிச்சாமி நேற்று தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்தநிலையில், தமிழக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டையில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கிவைத்தார்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை மீது காவி துண்டு போர்த்தியது, சமூக விரோதிகளின் செயல் எனவும், அவர்கள் கொரோனாவை விட மோசமான விஷக்கிருமிகள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என கூறினார்.

மேலும் பேசிய அவர், மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனாவை தினம் தினம் எதிர்கொண்டு வரும் நேரத்தில், சமூக விரோதிகள் இதுபோன்ற செயல்களை செய்கிறார்கள் எனவும், அவர்களை சட்டத்திற்கு முன் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என தெரிவித்த அவர், இதுபோன்ற செயல்களை செய்பவர்களை சமூகத்தில் இருந்து புறந்தள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்