சென்னையின் ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி சோதனைக்கு அனுமதி.
உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, கட்டுப்படுத்த தடுப்பூசியை கண்டுபிடிக்க பல நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், சமீபத்தில் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய தடுப்பு மருந்தை, இந்தியாவில் தயாரிக்க புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தை இந்தியாவில் மனிதர்களிடம் பரிசோதனை செய்ய 17 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தின் 2-ஆம் கட்ட சோதனை பாரதி வித்யாபீடம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று தொடங்குகிறது.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நான்கு முதல் ஆறு வாரங்களில் பொது சுகாதார இயக்குநரகம் தமிழ்நாட்டில் உள்ள ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் எனப்படும் தடுப்பூசியை வழங்கவுள்ளது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…