சென்னையின் ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி சோதனைக்கு அனுமதி.
உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, கட்டுப்படுத்த தடுப்பூசியை கண்டுபிடிக்க பல நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், சமீபத்தில் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய தடுப்பு மருந்தை, இந்தியாவில் தயாரிக்க புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தை இந்தியாவில் மனிதர்களிடம் பரிசோதனை செய்ய 17 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தின் 2-ஆம் கட்ட சோதனை பாரதி வித்யாபீடம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று தொடங்குகிறது.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நான்கு முதல் ஆறு வாரங்களில் பொது சுகாதார இயக்குநரகம் தமிழ்நாட்டில் உள்ள ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் எனப்படும் தடுப்பூசியை வழங்கவுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…