இன்று முதல் இந்த 10 மாவட்ட நீதிமன்றங்கள் இயங்க அனுமதி.!

Default Image

கொரோனா பரவாமல் தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தியதால் மார்ச் 26-ம் தேதி முதல் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டது. முக்கிய வழக்குகள் மட்டும் காணொளி மூலம் விசாரிக்கப்படுகிறது. சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான நிர்வாக குழு மாவட்ட முதன்மை நீதிபதிகளுடன்  ஆலோசனை நடத்தியது.

அதன் பின்னர், தமிழகத்தில் கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் உள்ள நீதிமன்றங்களை இன்று திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்றங்களில் 50 சதவீத ஊழியர்களுக்கு மிகாமல் பணி ஒதுக்க வேண்டும். நோய் தொற்று பரவாமல் இருக்கபாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என கூறியது. மேலும்,  வள்ளியூர் (நெல்லை), ஆலங்குளம் (நெல்லை), அரக்கோணம் (வேலூர்), ஸ்ரீரங்கம் (திருச்சி), மேலூர் (மதுரை) ஆகிய தாலுக்காக்களில் உள்ள நீதிமன்றங்களை திறக்க அனுமதி கொடுக்கவில்லை. இதனால், காணொளி மூலம் விசாரணை தொடர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்