சென்னையில் இன்று முதல் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 833 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 8324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் கொரோனாவால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,சென்னையில் இன்று முதல் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், அனைத்து தொழிற்பேட்டைகளிலும் 25 சதவீத அளவிலான பணியாளர்களை இயங்குமாறும், பணிக்கு வரும் தொழிலார்கள் அனைவரின் உடல்வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
முகக்கவசம் அணிந்து பணிக்கு செல்ல வேண்டும். அங்கு பணியாளர்கள் அனைவரும் தனிநபர் இடைவெளியுடன் பணிபுரிய வேண்டும். மேலும், பணியாற்றும் இடங்களை கிருமி நாசினிகள் தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும். குறிப்பாக, 55 வயது மேல் உள்ள தொழிலாளர்கள் பணிக்கு வரவேண்டாம் என்பன போன்ற விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. டெல்லியில் உள்ள…
தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…