தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு நடத்த அனுமதி வழங்கி, துணைத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே, 10, 11,12-ம் வகுப்புத் தனித்தேர்வர்கள், தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் துணைத் தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் 10-ம் வகுப்புத் துணைத் தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி முதல் தொடர்ச்சியாக 26-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
11-ம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 29-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 7-ம் தேதி வரை நடைபெறும். அதேபோல 12-ம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தனித் தேர்வு நடத்த அனுமதி வழங்குமாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம், தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்தது. இந்நிலையில், தமிழக அரசு, தனித் தேர்வை நடத்த அனுமதி அளித்து, துணைத் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது.
அதில், மாணவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சிறிய அறையாக இருந்தால் 10 மாணவர்கள் வீதம் அமர வைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. 400 சதுர அடி உள்ள அறையாக இருந்தால் 20 மாணவர்கள் வீதம் அமர வைக்கலாம். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து தேர்வெழுத வரும் மாணவர்களுக்குத் தனி அறைகள் கொடுக்கப்பட வேண்டும். மேலும், ஹால் டிக்கெட்டுகளை இணைய வழியில் பதிவிறக்கம் செய்ய மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் போட்டிகள் இன்று நிறைவு கட்டத்தை…
லண்டன் : 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து இசைஞானியாக நம்மில் உயர்ந்து நிற்கும் இளையராஜா தற்போது தனது நீண்ட வருட…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை…
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…