மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை இயக்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் பெரியாரின் பெரிய தொண்டரான வே.ஆனைமுத்து புதுச்சேரியில் இன்று காலமானார். அவருக்கு வயது 96.
பெரம்பலூர் அருகே முருக்கன்குடி என்ற கிராமத்தில் 21-6-1925-ம் ஆண்டில் வேம்பாயி – பச்சையம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் ஆனைமுத்து. இவர் தனது 19 ஆம் வயதிலே பெரியாரின் சொற்பொழிவைக் கேட்டு அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். அன்றுமுதல் பெரியாரின் கொள்கைகளை பரப்புவதே அவரின் வேலையாக அமைந்தது.
பெரியாரின் கொள்கைகளைப் மக்களிடையே பரப்ப, 1950-ம் ஆண்டில் “குறள் மலர்” என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அதன்பின் “குறள் முரசு”, “சிந்தனையாளன்” ஆகிய பத்திரிகைகளை தொடங்கினார். இதில் “சிந்தனையாளன்” பத்திரிகையை இன்றுவரை நடத்தி வருகிறார். மேலும், 1957-ம் ஆண்டில் அரசியல் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு 18 மாதங்கள் வேலுர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெரியாரின் சிந்தனைகள் குறித்து பல்வேறு நூல்களையும் இயக்கினார். மேலும், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கின்றார். 96 வயதாகும் வே.ஆனைமுத்து, இன்று புதுச்சேரியில் காலமானார். அவருக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…