பெரியார் சிலைகள் தொடர்ந்து சேதம் …!அதிமுக எம்.பி.மைத்ரேயன் வேதனை ..!

Default Image

பெரியாரின் சிலைகள் அவமதிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என்று அதிமுக எம்.பி.மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அதிமுக எம்.பி.மைத்ரேயன் கூறுகையில்,தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவராப்பட்டு மற்றும் திருச்சி மாவட்டம் சோமரசன்பேட்டை பகுதிகளில்  தந்தை பெரியாரின் சிலைகள் அவமதிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

அதேபோல் தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக சமூகநீதி, சுயமரியாதை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். சிலைகளை சேதப்படுத்துவதால் சித்தாந்தங்கள் மழுங்கி விடாது. அவரவர் கொள்கை அவரவர்க்கு.அமைதி நிலவும் மாநிலமான தமிழ்நாட்டில் குழப்பம் விளைவித்து அமைதியை சீர்குலைக்க முயலும் தீயசக்திகளை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி.மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்