தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு!2 பேர் கைது…ஹெச்.ராஜா சொன்னது நடந்தது..!
பாரதிய ஜனதா கட்சியினரால் வேலூர் மாவட்டத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சமூகவலைதளத்தில், திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என பதிவிட்டிருந்தார். தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, அவர் தனது பதிவை நீக்கினார்.
இந்நிலையில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதனைக் கண்ட பொதுமக்கள், சிலையை உடைத்ததாக பிடிபட்ட திருப்பத்தூர் பாஜக நகரச் செயலாளர் முத்துராமனை சரமாரியாகத் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக முத்துராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரான்சிஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்து. சென்னையில் வேப்பேரி பெரியார் திடல், அண்ணாசாலை சிம்ஸன் அருகில், அண்ணா மேம்பாலம் உள்ளிட்ட 22 பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல் கோவை,நெல்லை மற்றும் ஈரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள பெரியார் சிலைகளுக்கும் போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்