பேரறிவாளன் ஜாமீன் கோரிய வழக்கு 3 வாரத்திற்கு ஒத்திவைப்பு..!

Default Image

ஜாமின் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை 3 வாரத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், தனக்கு  ஜாமீன் கோரி பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ சிகிச்சைக்காக சிறையிலிருந்து பரோலில் வெளிவந்துள்ள பேரறிவாளன் தனது வழக்கை 3 ஒத்திவைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பேரறிவாளன் ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கை 3 வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்