#BREAKING: பேரறிவாளன் பரோல் நீட்டிப்பு- தமிழக அரசு உத்தரவு..!

Default Image

பரோல் முடிந்து இன்று பேரறிவாளன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவரது பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 29 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக சிறையில் உள்ள பல கைதிகள் உயிரிழந்து வரும் நிலையில் பல நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு உள்ள பேரறிவாளனுக்கு சிறையில் தொற்று ஏற்படும் என்பதால் அவருக்கு நீண்ட விடுப்பு வழங்க கோரி பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.

இதைத்தொடர்ந்து, பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. இந்நிலையில், பேரறிவாளன் பரோல் மேலும் 30 நாட்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. பரோல் முடிந்து இன்று பேரறிவாளன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவரது பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28-ஆம் தேதி புழல் சிறையிலிருந்து பேரறிவாளன் விடுவிக்கப்பட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்