பொங்கல் பரிசாக தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.2500-ஐ மக்கள் என்றும் மறக்கக்கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியது.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்றும், அதனுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, திராட்சை, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்திற்காக ரூ.5,604 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்த பொங்கல் பரிசு விநியோக பணிகளை ஜனவரி 4-ஆம் தேதி தொடங்கி, 12-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும், இதில் வாங்க முடியாதவர்களுக்கு 13-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த பரிசு பொருட்களுக்கான டோக்கன்களை வழங்கும் பணிகள் நாளை முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில், பொங்கல் பரிசாக தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.2500-ஐ மக்கள் என்றும் மறக்கக்கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து கூறியுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தியது.
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த…
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…
டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…