மக்களே ரெடியா…இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்!

Published by
Edison

நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று தீவிரமாக பரவிய நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டன.அந்த வகையில்,மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தின.இதனால்,கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்து வந்தது.ஆனால்,கடந்த சில நாட்களாக தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால், தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில்,தமிழகம் முழுவதும் இன்று (மே 8 ஆம் தேதி) சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் நடைபெற உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.குறிப்பாக,2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு முக்கியதுவம் அளிக்கும் வகையில் இந்த தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்,இது தொடர்பாக,அவர் கூறுகையில் :”தமிழகத்தில் 2 கோடி பேருக்கு இன்று கொரோனா தடுப்பூசி செலுத்துவதை நோக்கமாக கொண்டு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது.ஏனெனில்,அடுத்த மாதம் கொரோனா நான்காம் அலை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.இதனால்,கொரோனா தொற்று பரவல் மீண்டும் உயர வாய்ப்புள்ளது.எனவே,இன்று நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் அதிக அளவிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,திருவாரூர் மாவட்டத்தில் இன்று (08.05.2022) ஞாயிற்றுகிழமையன்று 2,080 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும்,இம்முகாமில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுநாள் வரை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களும்,இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களும்,பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாத அனைத்து முன்களப்பணியாளர்கள் மற்றும் இணை நோய் கொண்டுள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசியை செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

4 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

4 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

5 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

5 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

7 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

8 hours ago