“அன்பார்ந்த சென்னை மக்களே…இன்று இந்த இடங்களில்தான் தடுப்பூசி முகாம்” – மாநகராட்சியின் முக்கிய தகவல்!

Published by
Edison

சென்னை:இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறி அதற்கான இடங்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 600 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.அதன்படி,சுகாதார பணியாளர்கள்,முன்களப் பணியாளர்கள்,இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறி அதற்கான இடங்களையும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக,சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

அன்பார்ந்த சென்னை மக்களே!இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது”,என்று தெரிவித்துள்ளது.

மேலும்,சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களையும் மாநகராட்சி அறிவித்துள்ளது.அதன்படி,சென்னையில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களை http://covid19.chennaicorporation.gov.in/covid/gcc_booster_camp/  என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி,

  • கத்திவாக்கம்,
  • திருவொற்றியூர் குப்பம்,
  • சுனாமி குடியிருப்பு, எர்ணாவூர்,
  • சாத்தங்காடு உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் மாலை 5 மணி வரை நடைபெறும் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

Recent Posts

“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…

3 hours ago

நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…

3 hours ago

தஞ்சை : நேருக்கு நேர் மோதி கோர விபத்து… பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…

4 hours ago

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு! நடந்தது என்ன?

சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…

5 hours ago

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…

5 hours ago

பிளே ஆப் சென்ற மும்பை….. டெல்லியை வீழ்த்தியதற்கு முக்கிய காரணங்கள் இதுதான்!

மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…

5 hours ago