மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்…! சென்னையில் இடியுடன் கூடிய கனமழை..!
சென்னையில் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அண்ணாநகர், கோயம்பேடு, முகப்பேர், கோடம்பாக்கம், தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும், நுங்கம்பாக்கம், சூளைமேடு, அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனியிலும் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.