எல்லா இடங்களிலும் ஒட்டபட்டுள்ள திமுக போஸ்டர்களை பார்த்தால் பொதுமக்கள் முகம் சுளிக்கிறார்கள் – எஸ்.பி.வேலுமணி

Default Image

யாரையும் கட்டுப்படுத்த முடியாத முதல்வராக ஸ்டாலின் இருக்கின்றார் என எஸ்.பி.வேலுமணி பேச்சு. 

அதிமுகவின் 51 வது ஆண்டு விழாவை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

காவல்துறை திமுக கொடியை பறக்க விட்டு, அதிமுக  கொடியை பறக்க விடாமல் செய்கின்றனர். எங்கே பார்த்தாலும் சாலைகள் மோசமாக உள்ளது. பொதுமக்கள் திமுகவிடம் சாலைகள் போடுங்கள் என கேட்பதற்கே பொதுமக்கள் பயப்படுகிறார்கள்.

யாரையும் கட்டுப்படுத்த முடியாத முதல்வராக ஸ்டாலின் இருக்கின்றார். முதல்வருக்கு கட்டுப்படாதவர்களாக திமுகவினரும் இருக்கின்றனர். எல்லா இடங்களிலும் ஒட்டபட்டுள்ள திமுக போஸ்டர்களை பார்த்தால் பொதுமக்கள் முகம் சுளிக்கிறார்கள்; அதிமுக போஸ்டர்கள் தான் மக்கள் விரும்பி பார்க்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஓட்டுமொத்த மக்களும் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துவிட்டார்கள். எப்போதும் தமிழகம் இந்தியை ஏற்றுக்கொள்ளாது. நாங்களும் அதில் உறுதியாக இருக்கிறோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்