கொரோனா தடுப்புபூசி போட்டதாக போலி சான்றிதழை தரும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வண்ணம் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சில இடங்களில் தடுப்பூசி போடாமலேயே, 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டு விட்டதாக வரும் சான்றிதழால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து, மக்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில், கொரோனா தடுப்புபூசி போட்டதாக போலி சான்றிதழை தரும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏஜென்டுகள், இடைத்தரகர்களை பொதுமக்கள் அணுக வேண்டாம் என்றும், பொது மருத்துவத் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும், தடுப்பூசி செலுத்திய பின்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று துணை இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆதார் எண்களை நண்பர், தெரிந்த களப்பணியாளர்கள் இடம் தந்து தடுப்பூசி செலுத்தியதாக சான்றிதழ் பெறுவதாக புகார் புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. .
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…