மக்களுக்கு பயம் போய்விட்டது.. சென்னையில் 1,000 தன்னார்வலர்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் விளக்கப்பட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியாவுடன், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் சிறார் தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான ஏற்பாடுகள், தொற்று பாதிப்பை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் விளக்கப்பட்டது. சென்னையில் கொரோனா கட்டுப்பாடு பணிக்காக 1,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்படவுள்ளன.

ஒரு வார்டுக்கு தலா 5 பேர் வீதம், 200 வார்டுகளில் தன்னார்வலர்கள் செயல்படுவார்கள். சென்னையில் நாள்தோறும் தொற்று கூடும் அச்சம் உள்ளது. தன்னார்வலர்களை மாநகராட்சியுடன் இணைத்து கோவிட் கேர் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரிப்பன் மாளிகையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு அறை தொடங்கும். சென்னையில் 15 மண்டலங்களில் மருத்துவ குழுவினருடன் டெலி கவுன்சிலிங் மையம் அமைக்கப்படும். சென்னையில் 35% மக்களே முகக்கவசம் அணிகின்றனர். பொதுமக்களுக்கு பயம் போய்விட்டது.

தொற்று ஏற்பட்டவர்கள் கார் ஆம்புலன்ஸ் மூலம் கொரோனா மையங்களுக்கு செல்ல ஏற்பாடு என்றும் சென்னையில் நாள்தோறும் பரிசோதனை அளவை 30,000 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு மாதத்திற்குள் 15- 18 வயது சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும். மத்திய அமைச்சர் உடனான கூட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிக்காக தமிழ்நாட்டிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது என்றார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

14 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago