மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கின்றார்கள் – முதல்வர் பழனிசாமி

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனா வைரஸின் தீவிரம் தெரியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கின்றார்கள் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முதலில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் வைரஸின் தாக்கம் குறையாததால் ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனவே, மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையுள்ள நிலையில், நேற்று பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் ஊரடங்கு நீடிப்பதா அல்லது தளர்வு செய்யப்படுவதா என்ற ஆலோசனை மேற்கொண்டனர். இதனைக்குறித்து மே 3 க்கு பிறகு அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகின என்பது குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனினும், கொரோனா பரவலை தடுப்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் 40 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். அப்போது, கொரோனா குறித்து காவல்துறையும், உள்ளாட்சி துறையும் ஒலிபெருக்கி மூலம் வீதிவீதியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் காய்கறி சந்தைகளில் மக்கள் சமூக விலகலை பின்பற்றவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றின் தீவிரம் தெரியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கின்றார்கள் என்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனா பரவலை முழுமையாக தடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள பங்கேற்றுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

4 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

4 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

4 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

4 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

5 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago