முல்லை பெரியாறு அணை கட்டிய கர்னல் பென்னி குயிக் சிலை லண்டனில் நிறுவப்பட்டது. 10ஆம் தேதி சிலை திறக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், இங்கிலாந்து ராணி மறைவின் காரணமாக அந்த சிலை திறப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
கேரளாவில் பிரிட்டிஷ் கர்னல் பென்னி குயிக் அவர்களால் கட்டப்பட்ட முல்லை பெரியாறு அணை தான் இன்றளவும் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் என தென்தமிழக விவசாயத்திற்கு பெரிதும் பக்கபலமாக இருக்கிறது.
இதனை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் அவருக்கு சிலைகள் உண்டு. அதே போல தமிழக அரசு சாரிபில் லண்டனில் பென்னி குயிக் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை திறப்பு விழா 10ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது
அதற்காக, தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி லண்டன் சென்றுருந்தார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் மறைந்தார். இதனால் இங்கிலாந்தில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதால், அங்கு எந்த அரசு நிகழ்ச்சியும் நடைபெறாது.
இதனால், லண்டனில் நடைபெற இருந்த பென்னி குயிக் சிலை திறப்பு விழா ரத்து செய்யப்பட்டதாக லண்டனில் இருந்து திரும்பி வந்த அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், அது பூங்காவில் நிறுவப்பட்டு விட்டது. சிலை திறப்பு என்பது வெறும் சம்பிரதாயம் தான். அதனால் மீண்டும் திறக்க வேண்டிய தேவையில்லை. இப்போதே மக்கள் சிலையை சுற்றி பார்க்க தொடங்கி விட்டனர். என அவர் தெரிவித்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…