உயிரிழந்த பென்னிக்ஸின் நண்பர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

Default Image

பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் உயிரிழப்பிற்கு காரணமான காவலர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து சாத்தான்குளத்தில் பென்னிக்ஸின் நண்பர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் மொபைல் கடை வைத்து நடத்தி வந்த பென்னிக்ஸ்  மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகிய இருவரையும் போலீசார் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கடையை திறந்து வைத்திருப்பதாக கைது செய்து அழைத்துச் சென்று சிறையில் வைத்து சித்திரவதை படுத்தி கொலை செய்துள்ளனர். இந்த இரட்டை கொலைக்கு  இந்தியா முழுவதும் எதிர்ப்பு வெடித்தது.

இந்த இரட்டை கொலைக்கு காரணமானவர்கள், கைது செய்தவர்கள் என காவலர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சிபிசிஐடி மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கையாக காவலர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதுபென்னிக்ஸின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்துள்ளது. தங்களது அண்ணன் மற்றும் தந்தைக்கு நீதி கிடைப்பதாக அவர்கள் கூறி உள்ளனர். இந்நிலையில் பென்னிக்ஸின் நண்பர்கள் சாத்தன்குளம் முழுவதும் இனிப்பு வழங்கி இந்த தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்