வாகனங்களில் ஸ்டிக்கர் கட்டுப்பாடு! முக்கிய தகவல் இதோ!

Published by
பால முருகன்

Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர், மருத்துவர், ஆகியவற்றினுடைய பெயர்களை ஸ்டிக்கர்காளாக அடித்து வருவது அதிகமாகி இருக்கிறது. இதனை பற்றி போலீஸார் ஆய்வு செய்தபோது பலரும் இந்த துறையில் இல்லாமலே இது போன்று ஸ்டிக்கர்கள் அடித்து வைத்து இருப்பது தெரிய வந்தது.

எனவே, இதனை தடுக்கவேண்டும் என்பதால் தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார்.  இதனையடுத்து, வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினாலும், அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டனாலும்  அபராதம் விதிக்கும் நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வந்து இருக்கிறது.

எனவே, இனிமேல் தனிநபர் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்காத அடையாள ஸ்டிக்கர்களை ஒட்டவே கூடாது எனவும், அப்படி இதனை மீறியும் ஓட்டினால் அதற்கு அபராதமும் உண்டு எனவும் காவல்துறை  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஊடகங்களில் பணியாற்றுவோர் பெயரில் வாகனம் இருந்தது என்றால் அதில் ஊடகம் என்ற ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம். இருப்பினும். அந்த செய்தி நிறுவனத்தின் அரசு அங்கீகாரம் செய்த அடையாள அட்டை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அதைப்போல, மற்ற துறைகளிலும் இருப்பவர்களும் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளலாம் அவர்களும் அதற்கான அடையாள அட்டை கண்டிப்பாக வைத்து இருக்கவேண்டும்.

விதிகளை மீறி துறையில் இல்லாமல் ஸ்டிக்கர் ஓட்டினாலும். நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஓட்டினாலும் முதல் முறை விதியை மீறினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் எனவும், இரண்டாவது முறை என்றால் ரூ.1500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  முதற்கட்டமாக சென்னையில் போலீஸ், பாதுகாப்புத்துறை என ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களில் மட்டுமே இன்று ஆய்வு நடத்த உள்ளதாகவும், காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

“ஹிந்தி தான் பேசுவேன்” அடம்பிடித்த பெண் ஊழியர்! மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை!

மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு  மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…

13 hours ago

இனி இப்படிதான்! ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு!! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு.!

கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…

14 hours ago

“வெங்கடேஷ் ஐயருக்குப் பதிலாக ரஹானே”… கேப்டனை மாற்றியது ஏன்? கேகேஆர் விளக்கம்.!

டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…

16 hours ago

பட்ஜெட்டில் முக்கிய ‘அடையாள’ மாற்றம் : தமிழுக்கு ‘ரூ’ முக்கியத்துவம்!

சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…

17 hours ago

அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…

18 hours ago

நாளை தமிழக பட்ஜெட் : ஆய்வறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…

18 hours ago