தவறான வழியில் பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை-சிதம்பரம் குடும்பத்தினர் அறிக்கை

Default Image

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ளார்.இந்த நிலையில் சிதம்பரம் குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் , சட்டவிரோதமாக பணம் ஈட்ட வேண்டிய அவசியம் எங்கள் குடும்பத்திற்கு இல்லை. தேவையான சொத்துகள் இருப்பதால் தவறான பணம் சேர்க்க அவசியம் இல்லை. பல நாடுகளில் சொத்துகள்,வங்கிக் கணக்குகள் இருப்பதாக வரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

ப.சிதம்பரத்தின் 50 ஆண்டுகால பொதுவாழ்வில் கிடைத்த நற்பெயரை கெடுக்க முயற்சி நடக்கிறது .ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயன்றாலும் உண்மை ஒருநாள் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது.

நிறைவான சொத்துகளை கொண்ட, முறையாக வருமானவரி செலுத்தும் சிறிய குடும்பம் நாங்கள். அறிவிக்கப்படாத வங்கிக் கணக்குகள், கணக்கில் காட்டாத சொத்துகள், போலி நிறுவனங்கள் பற்றிய ஆதாரத்தை அரசால் காண்பிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

appavu - pm modi
tn rain
VCK Leader Thirumavalavan - TN BJP Protest against TASMAC
TN Assembly - Speaker Appavu
TN CM MK Stalin - BJP State president Annamalai
gold price
Annamalai - BJP-Tasmac