நரேந்திர மோடி: நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது ” மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற (பிரதமர் மோடி) உங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு இந்திய வரலாற்றில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் நாற்காலியில் அமர்ந்த முதல் தலைவர் நீங்கள் தான். 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று, நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக ஆட்சி அமைத்தீர்கள். மக்களவைத் தேர்தலில் உங்களுக்கு வெற்றியைக் கொடுத்ததன் மூலம் நாட்டு மக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியப் பிரதமராக நீங்கள் செய்த பணி, உலக அரங்கில் இந்தியாவுக்கு மரியாதைக்குரிய இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. அதன் மீது நீங்கள் வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்குவீர்கள். பொருளாதாரம், சமூக நீதி, வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்துவீர்கள் என அனைத்து மக்களும் நம்புகிறார்கள். அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றி, நல்லாட்சி வழங்க, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…