பேருந்திகுள் மழை! குடை பிடித்து பயணம் செய்த பயணிகள்!

Default Image

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 58 எஸ்டேட் உள்ளது. இந்த 58 எஸ்டேட்களுக்கும் வால்பாறையில் இருந்து அரசு பேருந்துகள் இயங்கி வருகிறது. வால்பாறை பகுதியில் ஜூன் மாதம் தொடக்கி அக்டோபர் மாதம் வரை மழை பெய்வது வழக்கம்.

இந்நிலையில் சமீபத்தில்  பெய்த மழையில் ராயன் எஸ்டேட் பகுதிக்கு சென்று கொண்டு இருந்த அரசு பேருந்தில் மேல் கூரையில் உள்ள ஓட்டையால் மழை நீர் நேரடியாக பேருந்துக்குள் நுழைகிறது.

இதனால் பயணிகள் இருக்கையில் அமரமுடியாமல் தவித்து வருகின்றனர்.மேலும் பேருந்தில் குடை வைத்து கொண்டு பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.பழைய பேருந்துகளை இயக்குவதால் அங்கு அதிகமாக விபத்து நடப்பதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் பழைய பேருந்துகளை  இயக்குவதை நிறுத்தி விட்டு புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
sanjiv goenka rishabh pant
Porkodi Armstrong
Women In Space 2025
RIP Director SS Stanley
TN Fisherman