சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்!

Default Image

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

சென்னை – டெல்லி ராஜதானி சிறப்பு ரயில், ஜூன் முதல் இயக்கப்பட உள்ள நிலையில், ரயில்களுக்கான முன்பதிவு நேற்றே  ஐஆர்சிடிசி இணையத்தில் தொடங்கப்பட்டது. மேலும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 கவுண்டர்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இதில் பயண சீட்டு எடுக்க மட்டுமே முடியும். பயண சீட்டை ரத்து செய்தல், பணம் திரும்ப பெறுதல் போன்றவை கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக வந்துள்ளனர்.

இதனையடுத்து, பயணசீட்டுகள் அனைத்தும் இணையதளம் வழியாக முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அங்கு வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்