சமூக வலைத்தளம் மூலம் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொடைக்கானலில் ஒன்று சேர்ந்து இரவு நேர பார்ட்டியில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது காவல்துறைக்கு ரகசிய தகவல் மூலம் அவர்களை வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்று கொடைக்கானல் இங்கு தமிழகம் மட்டுமல்ல வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் என பல்வேறு இடங்களில் இருந்து வந்து செல்வார்கள். இந்த வகையில் சமூக வலைத்தளம் மூலம் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொடைக்கானல் மேல்மலை கிராமம் கூக்கால் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் போதையுடன் கூடிய இரவு நேர பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக தென் மண்டல காவல் தலைவர் சண்முகராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையறிந்த காவல்துறை 3 துணை கண்காணிப்பாளர் தலைமையில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பார்ட்டியில் ஈடுபட்டிருந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போதை பொருட்களான போதை காளான், கஞ்சா மற்றும் மதுபானம் உள்ளிட்ட போதை பொருட்களை வாங்கி வந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை தடுப்பு காவலில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…