வரும் 31ல் கட்சி அறிவிப்பு: 3 நாளில் சென்னை திரும்புகிறாரா ரஜினி? – மு.க அழகிரி

Published by
பாலா கலியமூர்த்தி

ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தை தொலைபேசி வாயிலாக மு.க அழகிரி நலம் விசாரித்துள்ளார்.

ரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து போனில் நலம் விசாரித்தேன் என முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி தெரிவித்ததாக கூறப்படுகிறது. 2 அல்லது 3 நாட்களில் சென்னை திரும்ப உள்ளதாக நடிகர் ரஜினி தொலைபேசியில் கூறினார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ரத்த அழுத்தத்தில் முன்னேற்றம் இருந்தாலும், ரத்த அழுத்தம் சற்று அதிகமாக உள்ளது. ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அவரை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ரஜினி எப்போது டிஸ்சார்ஜ் செய்வது என்பது பற்றி இன்று மாலை முடிவு வெளியிடப்படும் என கூறியுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் புதிதாக தொடங்கவுள்ள கட்சி குறித்த அறிவிப்பை வரும் 31-ஆம் தேதி வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். கட்சி பணிகள் வேகமாக நடைபெற்று நிலையில், தற்போது ரத்தம் அழுத்தம் காரணமாக மருத்துவனையில் ரஜினி அனுமதிக்கப்ட்டுள்ளார். சீக்கிரம் குணமடைந்து வரவேண்டும் என்பதே ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் வேண்டுதலாக உள்ளது. ஆனால், மருத்துவ பரிசோதனைகளில் கவலைப்படும் வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

9 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

11 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

11 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago