நாடாளுமன்ற தேர்தல் – 38 குழுக்களை அமைத்தது தமிழ்நாடு பாஜக!

Published by
பாலா கலியமூர்த்தி

நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 38 குழுக்களை அமைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக அறிவிப்பு இம்மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின் மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் தேர்தலுக்கான பணியில் தலைமை தேர்தல் மற்றும் மாநில தேர்தல் ஆணையங்கள் ஒருபக்கம் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் உள்ளிட்ட அனைத்து மாநில கட்சிகளும் தேர்தலுக்கு ஆயுதமாகி வருகின்றனர். அதன்படி, கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பணி அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் பிரதான கட்சிகள் செயல்பட்டு வருகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. 90 சதவீத பணிகள் நிறைவு.! – அமைச்சர் சேகர்பாபு தகவல்.!

இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 38 குழுக்களை அமைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அதன்படி, தேர்தல் நிர்வாகம், தேர்தல் அலுவலகம், கால் சென்டர், புரோட்டா கால், அலுவலக நிர்வாகம், மகளிர் பிரச்சாரக்குழு, இளைஞர் பிரச்சார குழு, பட்டியல் இனத்தை சேர்ந்த பிரச்சார குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று, பாஜக தேர்தல் பிரச்சார உரை தயாரிக்க தனி குழுவும், உரையை அச்சிட தனிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் அறிக்கை தயாரிக்க எச்.ராஜா, கேபி ராமலிங்கம், கார்வேந்தன், ராம சீனிவாசன் ஆகியோர் கொண்ட குழுவும், குற்றப்பத்திரிகை தயாரிப்பதற்காக பாஜக மாநில செயலாளர்கள் எஸ்ஜி சூர்யா, அஸ்வத்தாமன் ஆகியோர் கொண்ட தனி தேர்தல் குழுவும் அமைத்து அண்ணாமலை அறிவித்துள்ளார்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

15 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

16 hours ago