பட்ஜெட்டில் மிகப்பெரிய உணவு பதப்படுத்தும் பூங்கா திண்டிவனம் அருகே பெலாக்குப்பத்தில் 450 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என்றும், 10 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த உணவு பதப்படுத்தும் பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
வேளாண் பொருட்களின் மதிப்பைக் கூட்டி, சேதங்களைக் குறைக்க வலுவான – திறன் மிக்க உணவு பதப்படுத்தும் தொழில் மையங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக நிதியமைச்சர் தெரிவித்தார். திண்டிவனத்தை அடுத்த பெலாக்குப்பத்தில் 450 ஏக்கரில் மிகப்பெரிய உணவு பதப்படுத்தும் பூங்கா ஏற்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து தேனி, விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, கடலூர், சேலம், திண்டுக்கல், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒருங்கிணைந்த உணவு பதப்படுத்தும் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். இவற்றில் பழங்கள், காய்கறிகள், மீன்கள், பால் பொருட்கள், கோழி மற்றும் இறைச்சி பதப்படுத்தும் தனியார் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்மூலம் கிராமப்புறங்களில் கணிசமான வேலை வாய்ப்புகள் உருவாக வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்தார். சிறப்பு உணவு பதப்படுத்தும் கொள்கை வெளியிடப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…