ரூ.15,000 கடனுக்காக 13 வயது மகளை திருமணம் செய்து வைத்த பெற்றோர்.!

Default Image
  • திண்டுக்கல் மாவட்டம் கவுண்டனுரை சார்ந்த மூக்கன் தம்பதியிடம் ,குளித்தலையை சார்ந்த ஒரு தம்பதி ரூ.15,000 கடன் வாங்கி உள்ளனர்.
  • வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த முடியாததால் தங்களது 13 வயது சிறுமையை மூக்கன் மகன் சரவணகுமாருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இந்த தம்பதி வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் வாங்கிய பணத்திற்காக தங்களது 13 வயது மகளை சரவணகுமாருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்து உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கவுண்டனுரை சார்ந்தவர் மூக்கன், இவரது மனைவி அஞ்சலம் இவர்களுக்கு சரவணகுமார் (23) என்ற மகன் உள்ளார்.இவர்களிடம் குளித்தலையை சார்ந்த ஒரு தம்பதி ரூ.15,000 கடன் வாங்கி உள்ளனர்.

இந்த தம்பதி வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் வாங்கிய பணத்திற்காக தங்களது 13 வயது மகளை சரவணகுமாருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்து உள்ளனர்.

இதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி 13 வயது சிறுமையை ,சரவணகுமாருக்கு கட்டாயமாக கோவிலில் வைத்து திருமணம் செய்து உள்ளனர்.கடந்த 5 மாதங்களாக சரவணா குமார் சிறுமியுடன் குடும்பம் நடத்தி உள்ளார்.இந்நிலையில் இந்த திருமணத்தில் சற்று கூட விருப்பம் இல்லாத அந்த சிறுமி குழந்தைகள் நல உதவி மையத்திற்கு தகவல் கொடுத்து உள்ளார்.

பின்னர் போலீசாருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதை தொடர்ந்து போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் சரவண குமாரையும் ,குழந்தைகள் திருமண தடுப்பு பிரிவுகளின் கீழ் சரவணகுமார் பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோரையும் கைது செய்து உள்ளனர்.சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்