கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டு மன்னார் கோவில் தாலுகாவை சேர்ந்தவர் சம்மந்தம்.இவரது மகள் சாருலதா ஆவார்.இவர் தலித் சமூதாயத்தை சேர்ந்த விஜய் என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார்.
சாருலதா வன்னியர் சமூதாயத்தை சேர்ந்தவர் ஆவார்.குடும்பத்தில் சாதி வேறுபாடு காரணமாக இருவரின் காதலையும் அவர்களின் பெற்றோர் ஆதரிக்கவில்லை.இதனால் 5 வருடமாக காதலித்து வந்த இவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இவர்களின் இந்த செயல் சாருலதாவின் அண்ணனுக்கு பிடிக்கவில்லை.இருவரையும் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் திங்கள் கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகேர்ப்பு கூட்டம் நடந்து வந்தது.
அப்போது சாருலதாவின் கணவர் விஜய் அந்த கூட்டத்திற்கு கையில் மனுவுடன் வந்துள்ளார்.அதில் அவர் என் மனைவி பெயர் சாருலதா.நாங்கள் இருவரும் வெவேறு சமூதாயத்தை சேர்ந்தவர்கள்.
நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.இது பிடிக்காமல் அவளின் கும்பத்தினர் அவளை அடித்து உதைத்து சித்தரவதை செய்வதாக காவல் துறையினரிடம் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை.
இந்நிலையில் அவரின் மனைவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் ஒரு தலித் பையனின் குழந்தை உன் வயிற்றில் இருக்க கூடாது என்று கூறி அதை வலுக்கட்டாயமாக கலைத்ததாகவும் தற்போது அவரின் மனைவி எப்படி இருக்கிறார் என்ன நிலையில் இருக்கிறார் என்று கூட தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த மூன்று மாதமாக அவரது மனைவியை பிரிந்து பெரும் மன உளைச்சலில் இருப்பதாகவும் மனைவியின் குடும்பத்தினரால் அவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரின் மனைவியை அவரிடமே ஒப்படைக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…