3 மாத கைக்குழந்தையை ரூ.1.80 லட்சத்துக்கு விற்ற பெற்றோர்…! என்ன காரணம்…?

Published by
லீனா

குடும்ப வறுமையின் காரணமாக 3 மாத கைக்குழந்தையை ரூ.1.80 லட்சத்துக்கு விற்ற பெற்றோர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராம மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சரவணன்- மீனா தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நான்காவதாக கர்ப்பமாக இருந்த மீனா கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவருக்கு சுபஸ்ரீ என்று பெயரிட்டனர்.

இவர்கள் இருவரும் 4 பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு எப்படி வளர்த்து ஆளாக்க போகிறோம் என்று ஆலோசித்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக பிறந்து 3 மாதங்கள் ஆன குழந்தையை வீட்டில் காணவில்லை. இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவர்களிடம் குழந்தை எங்கே என்று கேட்டவுடன் தூங்கிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளனர். இவர்களது பதில் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரை சந்தேகத்திற்குள்ளாக்கியது.

 இதனையடுத்து கடந்த சில நாட்களாகவே அடையாளம் தெரியாத சிலர் சரவணனின் வீட்டிற்கு வந்து போவதாக இருந்தனர். அவர்கள் யார் என்று கேட்டபோது அவர்கள் உறவினர்கள் என்றும் நண்பர்கள் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து குழந்தையை குழந்தை சுபஸ்ரீ ரூ 1.80 லட்சத்துக்கு விற்றதாக தகவல் கிடைத்ததை அடுத்து, இது பற்றிய ரகசிய தகவல் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிடைத்துள்ளது.

தகவலின்பேரில் விசாரணையில் இறங்கிய அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பாக, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் துரைமுருகனுக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சரவணன் வீட்டிற்கு சென்ற போது, கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் பீட்டிற்கு தப்பியோடியுள்ளனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், மாயமான சரவணன் – மீனா இருவரையும், போலீசார் அவர்களது உறவினர் வீட்டில் வைத்து பிடித்தனர். அவர்களிடம் விசாரித்த போது, வறுமையின் காரணமாக கோவையை சேர்ந்த தம்பதிக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்றதை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து, போலீசார் குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த ஈரோட்டை சேர்ந்த ராஜேந்திரன், செந்தில்குமார், மண்ணச்சநல்லூரை சேர்ந்த முத்தையன் மற்றும் குழந்தையின் பெற்றோர் சரவணன், மீனா ஆகியோரை கைது செய்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

33 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

41 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

50 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

58 mins ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

1 hour ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago