சேலம் : ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்.! பெற்றோர் விட்டு சென்றதால் அதிரடி நடவடிக்கை.!

Published by
மணிகண்டன்

சேலம் அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பெண் குழந்தைகளை பராமரிக்க இயலாத காரணத்தால் பெற்றோர்கள் மருத்துவமனையில் விட்டு சென்றனர். 

கடந்த அக்டோபர் மாதம் சேலம் அரசு மருத்துவமனையில் ஒரு பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 20ஆம் தேதி ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன.

மூன்று பெண் குழந்தைகளை தங்களால் வளர்க்க முடியாது என கூறி பெற்றோர்கள் , அரசு மருத்துவமனை முதல்வர் மருத்துவர் வள்ளியிடம் இந்த குழந்தைகளை மருத்துவமனையில் விட்டு செல்ல கேட்டுள்ளார். முதலில் மருத்துவமனை முதல்வர் வள்ளி மறுத்துள்ளார்.

பின்னர் பெற்றோர்கள் மீண்டும் தங்கள் குடும்ப வறுமையை கூறவே, அதன் பின்னர் மருத்துவமனை முதல்வர் வள்ளி சம்மதித்துள்ளார். அதன் பின்னர் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரியிடம் 3 குழந்தைகளும் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர், இந்த விவரம் அறிந்த கலெக்டர் கார்மேகம் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து அந்த குழந்தைகளை பார்வையிட்டார். ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்ததால் எடை குறைவாக இருந்த காரணத்தால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெற்றோர்கள் திரும்பி வந்து கேட்டால் குழந்தைகளை திருப்பி அவர்களிடம் கொடுக்கலாம் எனவும், அப்படி திரும்பி வரவில்லை என்றால் தத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

16 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

17 hours ago