மாணவர்களின் தற்கொலைகளுக்கு பெற்றோரின் அதிக எதிர்பார்ப்பே காரணம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று முன் தினம் நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்காரணமாக மாணவர்கள் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.
இந்நிலையில், மதுரையில் நேற்று பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற தகுதி தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. அதில் கலந்துகொண்ட பின், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது அவர், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு கோரிக்கை வைத்து வருவதாக தெரிவித்தார். மேலும், மாணவர்களின் தற்கொலைகளுக்கு பெற்றோரின் அதிக எதிர்பார்ப்பே காரணம் என குற்றம் சாட்டிய அவர், மாணவர்களுக்காக தமிழக அரசு போராடி வருவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…
ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…