சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை!மாணவர்களை படிக்க அனுப்ப தயங்கும் பெற்றோர்கள்!

Default Image

சென்னையை அடுத்துள்ள காட்டாங்குளத்தூரில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் எம்பி பச்சமுத்து இந்த பல்கலைக்கழகத்தின் உரிமையாளராக உள்ளார்.

இந்த பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பொறியியல் உட்பட பல படிப்புகள் கற்பிக்கப்படுகிறது.இங்கு படிக்கும் பெரும்பாலானோர் வெளிமாநிலத்தையும் வெளிமாவட்டத்தையும் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இங்கு படிப்பவர்களில் பலர் வசதியானவர்கள்கள் அதனால் ஹாஸ்டலும் உள்ளேயே அமைந்துள்ளது.இருப்பினும் தொடர்ந்து இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ மனைவிகள் தற்கொலை செய்து வருகின்றன.

கடந்த மாதம் 10 வது மாடியில் இருந்து குதித்து மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.அதனை தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனுஷ் சௌத்ரி என்ற மாணவர் 2 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ராகவன் என்ற இளைஞன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.ஐடி பிரிவில் 4-ம் வருடம் படிக்கும் இந்த மாணவன் சனி,ஞாயிறு விடுமுறை முடித்து இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு வந்துள்ளார்.

ஆனால் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த மாணவனின் தற்கொலையை தொடர்ந்து இந்த மாதத்தில் தொடர்ந்து மூன்றாக அதிகரித்துள்ளது.

இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்