சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சார்ந்தவர் கோபால் இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி சுமித்ரா.இவர்களுக்கு அபிமன்யு என்ற ஒரு மகன் உள்ளார்.நேற்று கோபால் தனது மகன் மற்றும் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் கொருக்குப் பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பி வந்தனர்.
கொருக்குப் பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்த போது காற்றில் இருந்து பறந்து வந்த மாஞ்சா நூல் இருசக்கர வாகனத்தில் முன் உட்காந்து இருந்த அபிமன்யு கழுத்தில் வெட்டியது.
உடனே அபிமன்யுவை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அபிமன்யுவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.இது குறித்து ஆர்.கே நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மாஞ்சா நூலால் ஏற்பட்ட உயிர் இழப்புகளை தொடர்ந்து மாஞ்சா நூல் மற்றும் காத்தாடிக்கு அரசு தடை விதித்து உள்ளது.ஆனாலும் மாஞ்சா நூலால் குழந்தை அபிமன்யு இறந்தது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…