ஒருதலை காதல் விபரீதம்.? கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொலை.! கொலையாளி தப்பியோட்டம்.!

Published by
மணிகண்டன்

சென்னை பரங்கிமலை ரயில் நிலைத்தில் கல்லூரி மாணவி சத்யாவை, சதீஸ் எனும் இளைஞன் ரயில் முன்பு தள்ளிவிட்டதில் மாணவி உயிரிழந்தார். கொலையாளி சதீஷ் தப்பியோட்டம். 

சென்னையில் இன்று மதியம் 1 மணி அளவில் பரங்கி மலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு இளைஞர் கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த சத்யா (வயது 20) எனும் கல்லூரி மாணவியை, அதே பகுதியை சேர்ந்த சதீஷ் எனும் இளைஞன் இன்று மதியம் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் வரும் சமயத்தில் தள்ளிவிட்டுள்ளார்.

இந்த கொடூர சம்பவத்தில் ரயில் முன் விழுந்த மாணவி சத்யா தலை துண்டித்து உயிரிழந்தார். கொலை செய்த சதீஷ் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டார்.

ரயில் நிலையத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும்,  இதனை அடுத்து ரயில் நிலையத்தில் வந்துகொண்டிருந்த மின்சார ரயிலின் முன்பு, சத்யாவை சதீஷ் தள்ளி விட்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது .

ஒருதலை காதல் விவகாரம் தொடர்பாக இந்த கொலை நடைபெற்றதா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய சதீஷை போலீசார் தேடி வருகின்றனர்.

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

43 mins ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

9 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

21 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago