பாராமெடிக்கல் கலந்தாய்வு 21-ல் தொடக்கம் – அமைச்சர் அறிவிப்பு

Default Image

Para Medical மருத்துவ படிப்புகளுக்கான Rank List வெளியிட்டார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

பாராமெடிக்கல், நர்சிங், பி.பார்ம் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு செப்டம்பர் 21-ல் தொடங்குகிறது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 36 அரசு மருத்துவ கல்லூரிகளில் பாராமெடிக்கல் கலந்தாய்வு நடைபெறும் என சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். இதன்பின்,  Para Medical மருத்துவ படிப்புகளுக்கான Rank List வெளியிட்டார்.

17,233 இடங்களில் சேர 83,774 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும். மேலும், MBBS, BDS படிப்புகளில் AIQ இடங்களில் சேருவதற்கான Notification-ஐ மத்திய அரசு வெளியிட்டதும், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான Notification வெளியிடப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்