நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் மு க ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் திமுக வெற்றி பெற்றதால் தனது நாக்கை வெட்டி காணிக்கையாகப் படைத்த பரமக்குடி வனிதா.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகள் தொடர்ந்து அதிமுக ஆட்சி செய்த நிலையில், திமுக 10 ஆண்டுகளும் எதிர்க்கட்சியாக இருந்து வந்த நிலையில், திமுக தொண்டர்கள் அனைவருமே திமுக இந்த முறை நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என பல வழிகளில் வேண்டுதல் நடத்தியும் பிரச்சாரங்களையும் செய்து வந்தனர். இந்நிலையில் பரமக்குடியை சேர்ந்த கார்த்தி என்பவர் தீவிரமான திமுக தொண்டன். இவரது மனைவி வனிதாவும் திமுக இந்த முறை ஜெயிக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். இதனையடுத்து சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக வந்தால் தனது நாக்கை அறுத்து காணிக்கையாக படைப்பதாக பரமக்குடியில் உள்ள கோவிலில் வேண்டி கொண்டுள்ளார் வனிதா.
அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது வெற்றி பெற்றுள்ள நிலையில், தான் சொன்னபடியே தன்னுடைய நாக்கை அறுத்து வனிதா காணிக்கையாக செலுத்தி தனது நேர்த்தியை நிறைவேற்றியுள்ளார். நாக்கை அறுத்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த வனிதாவை உடனடியாக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்பொழுது வனிதாவுக்கு தீவிரமாக மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருவகிறதாம். தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்காக தனது நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்தி உள்ள பெண்மணியின் செயல் தற்பொழுது தமிழகம் முழுவதிலும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…