12 ஆண்டுகளுக்கு பின்…முக்கிய பிரமுகர் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது!

Published by
Edison

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர்,சிவகுமார் என்பவரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கியிருந்த நிலையில்,அதற்கு தவணை தொகையை செலுத்த சென்ற அவரது மகளை,சிவகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் பலாத்காரம் செய்து,வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றினர்.

இதனையடுத்து,மனமுடைந்த அப்பெண்ணின் தாயார் இந்த பதிவை நீக்க உதவிடக் கோரி,அப்பகுதியை சேர்ந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் வேலுசாமி அவர்களிடம் கெஞ்சியதை அடுத்து,அப்பெண்ணுக்கு உதவியாக,போலீசில் புகார் அளித்துவிட்டு இரவில் வீடு திரும்பிய வேலுசாமி அவர்களை கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர்கள் வழிமறித்து கொடூரமாக வெட்டி படுகொலை கொலை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து,இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,இந்த வழக்கில்,சிவகுமார் திரன்,மிலிடெரிகணேசன்,அருண்,அன்பு,ஆமையன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அதன்பின்னர்,அனைவரும் ஜாமீனில் வந்தனர்.

ஆனால்,அதன்பின்னர்,இந்த வழக்கில் தொடர்புடைய ஆமையன் அதே கும்பலால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.பூபதி என்பவர் தலைமறைவானார்.

இதனையடுத்து,இளம்பெண் பாலியல் வழக்கு,வேலுசாமி கொலை வழக்கு தனித்தனியாக நடைபெற்று வந்த நிலையில்,இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கடந்த வருடம் தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில்,முக்கிய குற்றவாளியாக இருந்த ஆமையன் கொலை செய்யப்பட்டதன் காரணமாக,வழக்கில் முதல் குற்றவாளியான சிவகுமாருக்கு 5 ஆண்டு கடுங்காவல்  தண்டனையுடன், 35 லட்சம் அபராதமும் விதித்து நாமக்கல் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன் காரணமாக,இந்த வழக்கில் தண்டனை பெற்ற சிவக்குமார் சிறை யில் உள்ளார்.ஆனால்,வேலுசாமி கொலை வழக்கில் சிவக்குமாரை தவிர மற்றவர்கள் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

இந்நிலையில்,வேலுசாமி கொலை வழக்கின் தீர்ப்பு,இன்று (மார்ச் 14 ஆம் தேதி) நாமக்கல் விரைவு நீதிமன்றத்தில் வெளியாகவுள்ளது.கடந்த 12 வருடங்களாக நடத்தப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பை  பள்ளிப்பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும்,அப்பகுதி மக்களும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Recent Posts

பாக்., வீரர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்கலயா? சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்கு முன்னாள் வீரர் கடும் சாடல்.!

பாக்., வீரர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்கலயா? சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்கு முன்னாள் வீரர் கடும் சாடல்.!

பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…

34 minutes ago

39 தொகுதிகள் 31ஆக மாறும்! தமிழ்நாட்டின் குரல்வளை நசுக்கப்படும்! மு.க.ஸ்டாலின் அழைப்பு!

சென்னை : வரும் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.…

1 hour ago

தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா… தீயாக வேலை செய்யும் ஆனந்த் – ஆதவ் அர்ஜுனா.!

சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…

2 hours ago

அம்பேத்கரை விட மோடி பெரியவரா? கொந்தளித்த அதிஷி! சஸ்பெண்ட் செய்த சபாநாயகர்!

டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி  27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…

2 hours ago

கலைஞர் நூற்றாண்டு அகாடமி : பாக்ஸிங்-ஐ கண்டு கழித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை :  சென்னை கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இளைஞர்…

2 hours ago

இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?

துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…

3 hours ago