விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ஆதரித்திருப்பதுதான்
தமிழக அரசால் இதுவரை மக்களுக்கு உருவான விளைவுகளிலேயே மிக மோசமானது என்று முக ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.
இதுகுறித்து முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் பழனிசாமி பதவியைக் காக்கவும், ஊழல் புகார்களில் இருந்து தப்பிக்கவும் இப்பாதகத்தை செய்ததாக ஒப்புக் கொண்டு விவசாயிகளிடம் மன்னிப்புக் கோருவது மட்டுமே அவருக்கிருக்கும் ஒரே வழி என்று முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை பாஜகவின் கூட்டணி கட்சி உட்பட 13 கட்சிகள் எதிர்க்கின்றன. அதிமுக உள்ளிட்ட 4 கட்சிகள் மட்டுமே ஆதரிக்கின்றன. ஆதரித்துவிட்டு, விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்றும் சொல்கிறார் முதல்வர் பழனிசாமி என்று தெரிவித்துள்ளார். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுத்து, உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றவர்.
மேலும், சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக நிலங்களை பறித்திட தீவிரம் காட்டுபவர். பிஎம் கிஷான் திட்டத்தில் 6 லட்சம் போலிகளை சேர்த்து, விவசாயிகள் வயிற்றில் அடித்தவர் இன்றைக்கு விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறார் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…