விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ஆதரித்திருப்பதுதான்
தமிழக அரசால் இதுவரை மக்களுக்கு உருவான விளைவுகளிலேயே மிக மோசமானது என்று முக ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.
இதுகுறித்து முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் பழனிசாமி பதவியைக் காக்கவும், ஊழல் புகார்களில் இருந்து தப்பிக்கவும் இப்பாதகத்தை செய்ததாக ஒப்புக் கொண்டு விவசாயிகளிடம் மன்னிப்புக் கோருவது மட்டுமே அவருக்கிருக்கும் ஒரே வழி என்று முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை பாஜகவின் கூட்டணி கட்சி உட்பட 13 கட்சிகள் எதிர்க்கின்றன. அதிமுக உள்ளிட்ட 4 கட்சிகள் மட்டுமே ஆதரிக்கின்றன. ஆதரித்துவிட்டு, விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்றும் சொல்கிறார் முதல்வர் பழனிசாமி என்று தெரிவித்துள்ளார். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுத்து, உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றவர்.
மேலும், சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக நிலங்களை பறித்திட தீவிரம் காட்டுபவர். பிஎம் கிஷான் திட்டத்தில் 6 லட்சம் போலிகளை சேர்த்து, விவசாயிகள் வயிற்றில் அடித்தவர் இன்றைக்கு விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறார் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…