அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த பழ.கருப்பையா திமுகவிலிருந்தும் விலகல்

Default Image
  • கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தவர் பழ. கருப்பையா.
  • தற்போது திமுகவில் இருந்து பழ. கருப்பையா விலகியுள்ளார். 

அரசியல், சினிமா,எழுத்தாளர் என பன்முக தன்மை கொண்டவர் பழ. கருப்பையா.இவர் முன்னாள் சட்ட மன்ற உ றுப்பினர் ஆவார். அதிமுக  சார்பாக சென்னை மாவட்டத்தின் ஒரு பகுதியான துறைமுகம் தொகுதியில் கடந்த  2011-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் . இவர் அங்காடித் தெரு ,சர்கார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பட்டினத்தார் ஒரு பார்வை, அரசியல் சதிராட்டங்கள், காலம் கிழித்த கோடுகள், கண்ணதாசன், காலத்தின் வெளிப்பாடு, எல்லைகள் நீத்த  ராம கதை, கருணாநிதி என்ன கடவுளா? என்ற நாவல்களை எழுதியவர் ஆவார்.

கடந்த 2016 -ஆம் ஆண்டு கட்சி கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டார் என்றும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு அதிமுகவின் அப்போதைய பொதுச்செயலாளர்  ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இதனால் தன்னுடைய துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின்பு  அதிமுகவை விமர்சனம் செய்யத் தொடங்கினார்.பின்னர் அதிமுகவில் இருந்து கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.இந்தநிலையில் இன்று திமுகவில் இருந்து விலகுவதாக பழ. கருப்பையா அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்