திருவள்ளூர் : தமிழ்நாடு மாநிலம் திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பெயிண்ட் தொழிற்சாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர், ஒரு பெண் பலத்த காயமடைந்தார்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் இணைந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ எறிந்து கொண்டிருந்த தொழிற்சாலையில் இருந்து கடும் புகை கிளம்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்தின் போது, தொழிற்சாலைக்குள் இருந்து சந்திரா என்ற பெண் மீட்கப்பட்ட நிலையில், இடிபாடுகளில் சிக்கிய மற்றொருவரை தேடும் பணி நேற்று தீவிரமாக நடைபெற்று வந்தது. நேற்றைய தினம் மூவர் உயிரிழந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) மேலும் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது, இதனால் பலி எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…