தமிழ்நாடு

சேலத்தில் சமூக_நீதியையும், மாணவர் நலனை பாதுகாத்திட வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினரின் பொதுக்கூட்டம்

சமூக_நீதியையும், மாணவர் நலனை பாதுகாத்திட வலியுறுத்தி இந்திய_ஜனநாயக_வாலிபர்_சங்கம் (DYFI) நடத்தும் பொதுக்கூட்டம் நேற்று (18/09/2017) மாலை 6.30 க்கு சாமிநாதபுரத்தில் நடைபெற்றது. இதில் Cpim மாவட்ட செயலாளர் பி.தங்கவேலு, திமுக மாணவர் அணி மாநில துனை செயலாளர் ரா.தமிழரசன், விடுதலைசிறுத்தைகள் மாநகர மாவட்ட செயலாளர் I.காஜாமைதீன், பகுஜன்_சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் பார்த்திபன், Aiyf மாவட்ட செயலாளர் ரா.ரமேஷ், DYFI மாவட்ட செயலாளர் N.பிரவீன்குமார், தமுஎகச மாவட்ட தலைவர் மதுரபாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

2 Min Read
Default Image

ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்

ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத்தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைக்கு, ஒத்துழைக்க இலங்கை அரசு தொடர்ந்துப் பிடிவாதமாக மறுத்து வருவது கவலைக்கு உரியதாகவும், கண்டிக்கத்தக்கதாகவும் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் 36 ஆவது மனித உரிமை கவுன்சில் […]

#Politics 8 Min Read
Default Image

எம்எல்ஏக்கள் நீக்கம் செல்லாது?: நீதிமன்ற உத்தரவால் எடப்பாடிக்கு சிக்கல்!

தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் நேற்று சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்த தகுதி நீக்கம் செய்தார். இது தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வரம்பி மீறி சரசியல் சாசன அமர்வு பிறப்பித்த நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டிருப்பதாக பலரும் கூறுகின்றனர். இந்நிலையில் இந்த எம்எல்ஏக்கள் நீக்கம் செல்லாது என நீதிமன்றத்தால் அறிவிக்கப்படலாம் […]

#Politics 6 Min Read
Default Image

ஸ்மார்ட்சிட்டியாக போகும் சேலத்தின் அவல நிலை…!

திறந்தவெளி கழிப்பிடம் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்! சேலத்தின் மைந்தன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார் ஆனால் தற்போது ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள சேலம் மாநகரில் பெய்த சிறிய மழைக்கு கூட தாக்குபிடிக்க முடியாமல் சாலையில் சாக்கடை நீர் வெள்ளமாக பாய்ந்தோடியது திறந்தவெளி சாக்கடை இல்லா சேலத்தை எப்போது உருவாக்குவீர்கள் முதல்வர் அய்யா???? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.                             […]

2 Min Read
Default Image

18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம்: பின்னணியில் பி.எச்.பாண்டியன்

சென்னை: முதல்வர் பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லை; அவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று, அ.தி.மு.க.,வின் 19 எம்.எல்.ஏ.,க்கள் கவர்னர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்தனர். அதன் பின், புதுச்சேரியிலும், கர்நாடக மாநிலம் குடகு பகுதியிலும் அவர்கள் தங்க வைக்கப்பட்டு, முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை வைத்தனர்.இதையடுத்து, அ.தி.மு.க., சட்டசபை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ., குறிப்பிட்ட 19 பேர் மீதும், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என […]

#Politics 4 Min Read
Default Image

டிடிவி தினகரனயை கைது செய்ய தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

டிடிவி தினகரனை அக்.4-ம் தேதி வரை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதேபோல் நடிகர் செந்திலையும் கைது செய்ய தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக திருச்சி எம்.பி. குமாரை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கிற்கு தடை விதிக்கக்கோரி ஐகோர்ட் கிளையில் செந்தில் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

#Politics 1 Min Read
Default Image

பொறியியல் கலந்தாய்வு அட்டவணை இணையதளத்தில் வெளியீடு

பொறியியல் கலந்தாய்வு அட்டவணை www.tnea.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தொழிற்பிரிவு, பொதுப்பிரிவு, சிறப்பு பிரிவுக்கான பட்டியலை அட்டவணையில் தெரிந்துகொள்ளலாம். வரும் 17 ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கவுள்ளதை அடுத்து அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முழுமையான விவரங்களை www.tnea.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

education 1 Min Read
Default Image

42 படகுகளை மட்டுமே விடுவித்தது இலங்கை நீதிமன்றம்:தமிழக மீனவர்கள் அவதி!!!

இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 42 படகுகளை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலில் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு பிடித்து வைத்துள்ளது. இந்த நிலையில், 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2015 நவம்பர் மாதம் வரையிலான காலக் கட்டத்தில் பிடித்து வைத்துள்ள 42 படகுகளை விடுக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அந்தப் படகுகள் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த படகுகள் ஆகும். […]

3 Min Read
Default Image

நடிகர் கமல் மன்னிப்பு கோரினார்!!!

நடிகர் திலீப் விவகாரத்தில் நடிகை பெயரை குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கோரி டுவிட்டரில் அவர் கூறுகையில், ” பெண்களை நேசிப்பவனும் அவர்களின் உரிமைக்காகவும் போராடுபவன் நான். குற்றவாளிகளை விட்டு விட்டு வக்கீலை தண்டிப்பது போல் உள்ளது. எனது தாய் மற்றும் மகளுக்கு பிறகு அவர் பெயரை குறிப்பிட்டுள்ளேன். இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read
Default Image

மாநில அரசின் அலட்சியம்… உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால் முடங்கிய பணிகள்!

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால், பொதுமக்கள் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசு நிதி கொடுக்காததால், பணிகள் நடைபெறவில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சாலைப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. நிதி தரவில்லை இது குறித்து உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கணேசனிடம் கேட்டோம். “தமிழக பட்ஜெட்டில் உள்ளாட்சித் துறைக்குக் கணிசமான அளவுக்கு நிதி ஒதுக்குவார்கள்.  அந்த நிதியை மூன்று மாதங்களுக்கு ஒரு உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்குவார்கள். ஆனால், இந்த நிதி கடந்த 6 […]

9 Min Read
Default Image

கதிராமங்கலம் மக்கள் திட்டவட்டம்

ஓஎன்ஜிசி நிறுவனத்தை எதிர்த்து போராடியதால் கைது செய்யப்பட் டுள்ள 10 பேரை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் என கதிராமங்கலம் மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கதிரா மங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும். இதற்காக போராடிய தால் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டுள்ள 10 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கதிராமங்கலம் அய்யனார் கோயி லில் கிராம மக்கள் 3-வது நாளாக நேற்றும் காத்திருப்புப் […]

kathiramangalam 5 Min Read
Default Image

அருண் ஜேட்லிக்கு நாப்கினை பார்சல் அனுப்பிய தமிழக மாணவிகள் …….!

ஜிஎஸ்டி வரி நாடு முழுவதும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால் சில பொருட்களின் விலை குறைந்துள்ளது. சில பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வரியின்படி பெண்கள் பயன்படுத்தக்கூடிய சானிடரி நாப்கினுக்கு 12% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் பெண்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம், ஜிஎஸ்டி முன் 13.68% வரி இருந்ததாகவும். தற்போது ஜிஎஸ்டியின் கீழ் 12% வரி விதிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளது. ஆனால் ஜிஎஸ்டி […]

education 4 Min Read
Default Image

தமிழக மாணவர்கள் மூவர் ரஷ்யாவுக்கு கலைப் பயணம்

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியர்களின் மகன்கள் மூவர் ரஷ்ய நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்கின்றனர். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தற்போது இரண்டு அணுமின் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. மூன்று, நான்காவது அணு உலைகளின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.இந்த அணு உலைகள், ரஷ்யாவின் அணு ஆற்றல் கழகமான’ரொசாட்டம்’ என்னும் அமைப்புடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரொசாட்டம் அமைப்பினர், சர்வதேச அளவில் குழந்தைகள் கலைத்திட்டமாக ‘நியூக்ளியர் கிட்ஸ்’ அமைப்பை இயக்கி வருகிறது. இந்த அமைப்பு, வெளிநாடுகளில் உள்ள அணுமின் நிலையப் […]

education 4 Min Read
Default Image

பொறியியல் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் உயருகிறது !

சென்னை: தமிழகத்தில் 2017-2018 ஆம் கல்வியாண்டுக்கான சுயநிதிக் கல்லூரிகளுக்கான பொறியியல் படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது பொறியியல் கல்வி கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கான தரச்சான்று அல்லாத பாடப்பிரிவுக்கான கட்டணம் 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தரச்சான்று அல்லாத நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கான பாடப்பிரிவுக்கான கட்டணம் 70 ஆயிரம் ரூபாயிலிருந்து 85 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று என்பிஏ அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவுக்கான […]

education 3 Min Read
Default Image

பொறியியல் மாணவர்களுக்கான ., கவுன்சிலிங்கில் ஆன்லைன் அறிமுகம்!

சென்னை: ‘தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., இடங்களுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அடுத்த ஆண்டில், ஆன்லைனில் நடத்தப்படும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., படிப்புக்கு, தமிழக அரசு சார்பில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க, அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பெற்றோர், மாணவர்கள், சென்னைக்கு வர வேண்டியுள்ளது. அதற்காக, இலவச பஸ் பாஸ் வழங்குவது, அண்ணா பல்கலையில் தங்குமிடம் ஏற்படுத்துதல் போன்ற, […]

education 5 Min Read
Default Image

தமிழ்தேசியப்போராளி ஐயா ஓவீயர் வீரசந்தானம் வீரமரணம்

தமிழ்தேசியப்போராளி ஐயா ஓவீயர் வீரசந்தானம் அவர்கள் நேற்று( 13/07/17) மாரடைப்பால் காலமானார் அவருக்கு தமிழின மீட்புப் புலிகள் சார்பாக அஞ்சலி செலுத்தினர் அவர் இறந்ததுபோல் தெரியவில்லை அதே கம்பீரத்தோடு உறங்கி கொண்டடிருப்பது போல் இருந்ததுதமிழ் தேசியத்துக்கு ஒரு பெரிய இழப்பு ஆகத்து 10 – 1947 ல் பிறந்த ஐயா அவர்களின் மனைவி, மகள், அமெரிக்கா வில் வாழும் மற்றொரு மகள் மற்றும் குடும்பத்தினருக்கு தமிழின மீட்புப் புலிகள் மற்றும் தினச்சுவடு சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து […]

elam 2 Min Read
Default Image

சிறைக்குள் நடப்பது என்ன அதிர்ச்சி ரிப்போர்ட்

பெங்களூரு: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ருசியாக சமைத்து போட போயஸ் கார்டன் சமையல்காரர்கள் மீது சிறிய வழக்குகள் போட்டு சிறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மைக்ரோ ஓவன், பிரிட்ஜ், காபி மேக்கருடன் அதிநவீன மாடுலர் கிச்சனும் சிறையிலேயே அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் பெங்களூரு சிறைத்துறை டிஐஜி ரூபா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். விஐபிகளுக்கான சலுகை ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா கடந்த […]

8 Min Read
Default Image

தமிழக அரசின் 85% மருத்துவ மாணவர்களுக்கான இடஒதுக்கீடு அரசாணை ரத்து- உயர்நீதிமன்ற உத்தரவால் மாணவர்கள் அதிர்ச்சி

சென்னை: மருத்துவப் படிப்பில், மாநிலப் பாடத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித இடஒதுக்கீடு அரசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து தீர்ப்பளித்துள்ளது. ‘இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்’ என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மருத்துவ சேர்க்கைக்கு இந்தாண்டு மத்திய அரசு நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்தியது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதையும் மீறி, நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில், 38 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி […]

education 4 Min Read
Default Image

“வெளியில் ஆயூர்வேதம்: உள்ளே விபச்சாரம்”- புதுச்சேரியில் பகீர் கிளப்பிய கும்பல்!

ஆன்மிக நகரமான புதுச்சேரியில் சில நாள்களாக விபச்சாரத் தொழில் கொடி கட்டிப் பறந்து வருகின்றது. பிரெஞ்சுக் கட்டடக் கலையையும், கலாசாரத்தையும் ஒரு சேரக் கொண்டிருக்கும் புதுச்சேரியைக் காண ஆயிரக் கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அன்றாடம் வருகை தருகின்றனர். விளிம்பு நிலையில் இருக்கும் அப்பாவிப் பெண்களை மூளைச் சலவை செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பல்களுக்குப் புதுச்சேரியில் பஞ்சமில்லை. சமூக விரோதக் கும்பல்களின் டார்கெட் இவர்கள்தான். பணத்தாசை பிடித்த இந்தக் கும்பல் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்று மகளிர் […]

5 Min Read
Default Image

தனியார் பள்ளிகளுக்கு ஆப்பு வைக்கும் அமைச்சர் செங்கோட்டையன் ………!

சென்னை : தனியார் பள்ளிகளுக்கான கட்டண முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புதிய முறைகளுக்கான சட்ட திருத்த மசோதா சட்டசபையில் இன்று (ஜூலை 14) தாக்கல் செய்யப்பட உள்ளது.தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்களும், அதன் தொடர்ச்சியாக போராட்டங்களும் நடத்தப்பட்டதை அடுத்து 2009 ம் ஆண்டு, ஓய்வுபெற்ற நீதியரசர் கோவிந்தராஜன் தலைமையில் கட்டண நிர்ணய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் வழிகாட்டுதலின் பேரில் கட்டண நிர்ணயம் செய்ய புதிய […]

education 3 Min Read
Default Image