தினகரன் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் வகித்து வந்த பதவிகளில் இருந்து இதுவரை நீக்கப்படாமல் இருந்தனர். தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றியை தொடர்ந்து அதிமுக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல். தினகரன் ஆதரவு 6 மாவட்ட செயலாளர்கள் அதிமுக-வில் இருந்து நீக்கம் என தகவல். வி.பி.கலைராஜன், வெற்றிவேல், தங்க. தமிழ்ச்செல்வன், ரங்கசாமி, பாப்புலர் முத்தையா, சோழிங்கர் பார்த்திபன் ஆகியோரை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்க அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு.. source: dinasuvadu.com
வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், கலைராஜன் உள்ளிட்டோரை அ.தி.மு.க.விலிருந்து நீக்க திட்டம் .அதிமுக-வின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு என தகவல். * கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுபவர்கள் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள்… தினகரன் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் வகித்து வந்த பதவிகளில் இருந்து இதுவரை நீக்கப்படாமல் இருந்தனர். * தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றியை தொடர்ந்து அதிமுக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல். * தினகரன் ஆதரவு 6 மாவட்ட செயலாளர்கள் அதிமுக-வில் இருந்து நீக்கம் என தகவல். source: dinasuvadu.com
திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் வரும் 29 ஆம் தேதி நடைபெறுகிறது ஆர்.கே. நகர் தேர்தலில் திமுக தோல்வி குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல் source: dinasuvadu.com
பணம் கொடுத்து தினகரன் ஒரு தொகுதியில் வெற்றி பெறலாம்; அது எரிநட்சத்திரம் போல் எரிந்து போய்விடும் தினகரன் 5 மாதமாக வீட்டுக்கு வீடு பணம் கொடுத்து வெற்றி பெற்றது – ஹெச் ராஜா source: dinasuvadu.com
கழிவுநீர்தொட்டி சுத்தம் செய்யும் பணியில் விஷவாயு தாக்கி பலியானவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் தமிழகத்தில் கடந்த நவம்பர் வரை விஷவாயு தாக்கி 144 பேர் உயிரிழப்பு -மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் source: dinasuvadu.com
ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு தினகரன் ட்விட்டரில் நன்றி விஷால், சுப்பிரமணியன் சுவாமி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கும் நன்றி- தினகரன் source: dinasuvadu.com
அதிமுக தலைமை அலுவலகத்தில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் தொடங்கியது. * கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். source: dinasuvadu.com
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி. தினகரன் வெற்றிபெற்றதையடுத்து பல்வேறு தரப்புகளிலிருந்தும் பல்வேறு விதமான கருத்துக்கள் பரவலாகி வருகின்றன. டிடிவி தினகரன் அதிமுக வேட்பாளர் மதுசூதனனைக் காட்டிலும் 40,707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து அரசியல் களம் சொல்லாடல் களமாக மாறிவிட்டது. இந்நிலையில் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா தன் முகநூல் பக்கத்தில், “சின்னம்மா அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்குச் சான்றுதான் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள்” என்று பதிவிட்டுள்ளார். ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்டதற்காக தினகரன் மீது […]
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நேற்று டிடிவி தினகரன் வெற்றி பெற்றதை தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் உள்ள அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டிடிவி தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட ஒரு மடங்கு கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதிமுகவின் பலம் வாயந்த பகுதியாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது அதிமுக ஆட்சி அம்மாவுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் […]
ஆர்.கே. நகர் தேர்தல் தோல்விக்கு திமுக தான் காரணம் என அதிமுக கூறுவது வழக்கமான புலம்பல் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது தேமுதிக தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் – விஜயகாந்த் source: dinasuvadu.com
இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பணபலத்திற்கு அடிபணியாமல், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு, நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்காக, அயராது பாடுபட்ட கட்சியின் நிர்வாகிகளுக்கும், செயல் வீர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், அவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்களுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் நன்றி தெரிவித்துள்ளனர். ஆர்.கே. நகர் தொகுதியில், தி.மு.க.வும், தினகரனும் […]
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரனை, முதல்வர் பழனிசாமி அணியில் இருந்த வேலூர் எம்.பி. செங்குட்டுவன் நேற்று மாலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதன்மூலம் அதிமுகவில் மீண்டும் அணி தாவல் தொடங்கியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்தது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டது. சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு முதல்வர் பழனிசாமி அணியும், டிடிவி.தினகரன் அணியும் தனித்தனியாக செயல்பட்டன. அதையடுத்து முதல்வர் […]
மக்களிடம் இருந்து சூரட்டப்பட்ட பணம் மக்களிடமே சுருட்டி கொடுக்கப்பட்டுள்ளது; பணத்தால் வெற்றியை வாங்க முடியுமென்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்தது தேர்தலே அல்ல; 5 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்களில் 3ல் பாஜக வெற்றி பெற்றுள்ளது வாஜ்பாய் வித்திட்ட நல்லாட்சியை பிரதமர் மோடி தொடர்ந்து வருகிறார் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவை பற்றி கவலைப்படப் போவதில்லை; ஆர்.கே.நகரில் வாக்குகள் விற்கப்பட்டது என்பதுதான் உண்மை -தமிழிசை source: dinasuvadu.com
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர் தினகரனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வாழ்த்து.. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில்டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றுள்ளது குறிபிடத்தக்கது… source: dinasuvadu.com
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை * முதலமைச்சர், அமைச்சர்கள், கட்சி முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை… source: dinasuvadu.com
சென்னை ; ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இறுதி முடிவுகளின்படி குக்கர் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் 89,013 வாக்குகளை வாங்கி மிக பிரமாண்டமான வெற்றியை பெற்றுள்ளார். மொத்தம் பதிவான வாக்குகளில் 50.32 சதவீதம் வாக்குகளை இவர் பெற்றுள்ளார். இந்நிலையில் ஆர்.கே.நகர் மக்களுக்கும் மற்றும் ’தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ மக்களுக்கு ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினராக எனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்’ என்று தினகரன் தெரிவித்துள்ளார்… sources;dinasuvadu.com
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வென்றதையடுத்து, ஜனநாயகம் படுகுழியில் தள்ளப்பட்டு பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது எனவும் அதேபோல் தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறாமல் அதிமுக முழுமையான ஒத்துழைப்பு அளித்தது என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயரிடம் பெற்றுக் கொண்டார் தினகரன். அப்போது தினகரனுடன், செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட ஆதரவாளர்கள் இருந்தனர்.
வாக்குப்பதிவு தினமான இன்று ஹவாலா பாணியில் பணமானது வாக்காளர்களுக்கு வாரி இறைக்கப்பட்டது.பாதாளம் வரை பாய்ந்த பணத்தையும் தாண்டி விலை மதிக்க முடியாத 24,651 வாக்குகளை திமுக பெற்றது.ஆகையால் இந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என்பது திமுகவுக்கு தோல்வி இல்லை,மாறாக அது தேர்தல் ஆணையத்தின் தோல்வி என கூறியுள்ளார் திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின்
”ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ.” என்ற லெட்டர்பேடில், கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த டிடிவி தினகரன்… நாட்டின் மதசார்பற்ற கொள்கைக்கு ஊறு விளையாமல் பாதுகாத்திடுவோம் என்பதை உறுதியாக தெரிவித்து, உலகெங்கும் வாழும் கிறிஸ்துவ சகோதரர்களுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் என அவர் தனது லட்டர் பேடில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.