தமிழகத்தில் உள்ள அரசு மதுபானக்கடைகளில் மதுபானங்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்வதை தடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு ஜனவரி 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் நீர்வழி பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை இல்லை என தடை கோரி பெண் உரிமை இயக்கம் சார்பில் தொடர்ந்த வழக்கில், ஜன.5-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் நீர்வழி பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதில் சென்னை உயர்நீதிமன்றம் உறுதியாக உள்ளது என அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டம் பம்பொழி, வடகரை, அச்சன்புதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.அதேபோல் கேரள மாநிலம் ஆரியங்காவு, தென்மலை, புனலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் சற்று பிதியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து 6 கல்லூரி மாணவிகள் டெல்லி குடியரசுதின கொண்டாட்ட பேரணியில் பங்கேற்கின்றனர். அதேபோன்று இரு அரசு பள்ளி மாணவி மொத்தம் 7 பேர் தேர்வாகியுள்ளனர். டெல்லியில் குடியரசு தின கொண்டாட்ட அணிவகுப்பில் கலந்துகொள்ள சென்னை பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மாணவி ராமலட்சுமி சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் மிடாஸ், சாய் காட்டன்ஸ் உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரிச்சோதனை நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து அடையாறு கற்பகம் கார்டனில் உள்ள இளவரசி மருமகன் கார்திகேயன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
கூடங்குளத்தின் முதல் 2 அணு உலைகளின் சார்பற்ற அறிக்கையை வெளியிட வேண்டும். கூடங்குளம் அணு உலை முறைகேடு குறித்து அரசியல் கட்சிகள் பேச மறுக்கின்றன கூடங்குளம் அணு உலை முறைகேடு குறித்து யார்மீது வழக்குப்பதிய உள்ளார்கள் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சொர்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது 42 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் 11 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனியில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக காணபடுகிறது. இங்கு வரும் வெளியூர் பக்தர்களை சிலர் தாங்கள் கைடு என கூறிக்கொண்டு பழனியை சுற்றிகாட்டுவதாகவும், சாமி தரிசனம் சீக்கிரம் பார்க்க ஏற்பாடு செய்வதாகவும் கூறி பணம் பறித்து ஏமாற்றி விடுகின்றனர். ஆதலால், அவ்வாறான செயல்களை தடுக்கும் விதமாகவும், அவ்வாறு செய்பவர்களை பிடிக்கும் வகையில் காவல்துறை ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அவ்வாறு ஏமாற்றுபவர்களுக்கு கண்டிப்பாக சிறை தண்டனை வழங்கப்படும் என கூறினார். source :dinasuvadu.com
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடக்கும் விசாரணையில், ஜெயலலிதா சம்பந்தப்பட்ட அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தபடுகின்றனர். அதன்படி T.T.V.தினகரனுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது. மேலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, ‘ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை இன்னும் 7 நாட்களுக்குள் T.T.V.தினகரன் சமர்பிக்க வேண்டும்’ என உத்தரவிடப்பட்டுள்ளது. இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பபட்டுள்ள்ளது. source : dinasuvadu.com
ஒவ்வொரு பண்டிகையின் போதும் டாஸ்மாக் ஒரு டார்கெட் வைத்து அதனை முறியடித்தும் வருகிறது. அந்த வகையில் தற்போது ஆங்கில புத்தாண்டுக்கு ரூ.200 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் முடிவு செய்துள்ளது. இந்த டார்கெட்டை நிறைவு செய்ய அதிகமாக பீர்களை கொள்முதல் செய்து கடைகளுக்கு அனுப்பி வருகிறது. அதேபோல் அதிக விலைக்கு மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் தெரிவித்துள்ளது. source : dinasuvadu.com
வெங்காய விலை மீண்டும் ஏறுமுகமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சேலத்தில் லீ பஜார் மொத்த வியாபார மார்கெட்டில் நேற்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.57 முதல் ரூ.87 வரை இருந்தது. இந்த சின்ன வெங்காயம் 5 தரமாக பிரித்து விற்பனை நடந்து வருகிறது. இந்த விலை ஏற்றதால் சேலம் சில்லறை மார்கெட்டில் கிலோ 80 முதல் 110 வரை விற்க்கபடுகிறது. source : […]
வைகோவை மலேசியாவுக்குள் நுழைய விடாமல் தடுத்த மலேசிய அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளதாக ம.தி.மு.க கூறியுள்ளது. இது தொடர்பாக இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து வைகோவுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், 2017 ஜூன் 9ஆம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது குறித்துப் பிரதமருக்கு வைகோ கடிதம் எழுதியதைக் குறிப்பிட்டுள்ளது. இது குறித்துக் கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் மலேசிய உள்துறை அமைச்சகத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்திய வெளியுறவு […]
இன்று தமிழகம் முழுவதும் பல அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதில் ஒன்றாக பகுதிநேர ஆசிரியர்கள் சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனால், இன்று பள்ளிக்கு வராத பகுதிநேர ஆசிரியர்களை கணக்கெடுத்து வருகிறது பள்ளிகல்வித்துறை. இன்னொரு போராட்டமானது, தமிழகத்தை சேர்ந்த விஏஓக்கள் இன்று ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டமானது, கடந்த 3 ஆண்டுகளாக அரசு வழங்கிய லேப்டப்களுக்கு இணைய கட்டணம் அரசு கொடுக்கவில்லை என்பதற்காக நடத்துகிறார்கள். source : […]
ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை, தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், கடந்த 20ஆம் தேதி வெளியிட்டார். இதுதொடர்பாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், வெற்றிவேல் மீது, போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் தரப்பிலும், வெற்றிவேல் மீது, அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை அளிக்குமாறு, வெற்றிவேலுக்கு, விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. இதையடுத்து, ஜெயலலிதா சிகிச்சை வீடியோ நகலை, வெற்றிவேல் தரப்பில், […]
தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.26 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.62.55 காசுகள் உள்ளன. ஆனால் நேற்றையதினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.17 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.62.48 காசுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றையத்தினத்தை விட இன்றைய பெட்ரோல் விலையானது 9 காசுகளும்,டீசல் 7 காசுகளும் குறைந்துள்ளன.
தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2014 – 2015ல் ஆண்டில் 4407 பேரும், 2015-2016ல் 4437 பேரும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்ததாக மத்திய அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 4536 பேர் எய்ட்ஸ் நோயால் மரணம் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மே மாதம் முதல் 2375 பேர் […]
ஓகி புயல் வந்து தமிழ்நாடு, கேரளா கடலோர மாவட்டங்களை பெரிதும் பாதித்தது. மேலும், இதன் பாதிப்புகளிலிருந்து இன்னும் மீள முடியாமல் மக்கள் பலர் தவிக்கின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி சில தினகளுக்கு முன்னர் வந்து ஆய்வு மேற்கொண்டார். கன்னியாகுமரியில் ரப்பர் உள்ளிட்ட விவசாய பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன. இதன் மொத்த பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்காக 8 பேர் கொண்ட மத்திய அதிகாரிகள் குழு 28ஆம் தேதி தமிழகம் வருகின்றனர். source : dinasuvadu.com
இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் ஏற்கனவே 56 மீனவர்கள் சிறைபிடிக்க பிட்டனர். இவர்களின் நீதிமன்ற காவல் தற்போது ஜனவரி 9ஆம் தேதிவரை நீட்டித்து இலங்கை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மீனவர்கள் ராமநாதபுரம், புதுகோட்டை மீனவர்கால் ஆகும். மேலும், ஏற்கனவே இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம், நகை மாவட்ட மீனவர்கள் 20 பேர் நாளை தமிழகம் வரவுள்ளனர் என்பது குறிப்ப்பிடத்தக்கது. source : dinasuvadu.com
ரயில் பயணிகள் அதிகமாக செல்லும் மாநகரங்களின் ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது, சேலம் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், சேலம் ரயில் நிலையத்தில், 5 நடைமேடைகளிலும் இலவச வைஃபை வசதி ஏற்படுத்த நிர்வாகம் முடிவு செய்து இருந்தது. அதன் படி இன்று முதல் சேலம் வைஃபை வசதி செயல்படும் என நிர்வாகம் அறிவித்ததுள்ளது. source : dinasuvadu.com
ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டு டோக்கனுக்கு பணம் வழங்கவில்லை என மோதலில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆர்.கே,நகர் தேர்தலுக்கு முன்னர் ரூ.20 கொடுத்து “அதனை டோக்கனாக வைத்துக்கொள்ளுங்கள் பிறகு அதற்கான பணத்தை பட்டுவாடா செய்கிறோம்” என்று தினகரன் சார்பில் கூறியதாக புகார்கள் எழுந்தது. அதன் பின் தற்போது தேர்தல் நடந்து முடிந்து அதில், தினகரன் வெற்றியும் அடைந்துள்ளார். இந்நிலையில் தற்போது ஆர்.கே.நகரில் உள்ள மீனாம்பாள் நகரில், டோக்கனுக்கு பணம் வழங்குமாறு அங்குள்ள […]