முழுமையாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என திமுக தலைவருக்கு அமைச்சர் காமராஜ் பதில் அளித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் நேற்று, அதிமுக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை முழுமையாக வாங்க மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் எவ்வித உச்சவரம்புமின்றி நேரடிக் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யவும் அதற்கேற்றவாறு தேவையான எண்ணிக்கையில் நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க முதல்வர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்கள், கடந்த 2019 முதல் 2020 ஆம் ஆண்டுக்கான கொள்முதல் பருவத்தில் 2135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து அதன் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து உள்ளதாக கூறியுள்ளார். மேலும் 1500 கொள்முதல் நிலையத்துக்கு பதிலாக 2135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். கள நிலவரம் அறியாமல் எதிர்க்கட்சித் தலைவர் குறை கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…