நெல்லை மாவட்டம் பணக்குடி பகுதியை சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை காவலராக பெங்களூரில் பணியாற்றி வந்தவர் தான் உதயகுமார். இவருக்கு மீனா என்ற மனைவியும் ஐஸ்வர்யா, முரளிதரன் ஆகிய இரு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு பணியில் இருந்த உதயகுமார் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான பணகுடிக்கு இன்று காலை ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் கொண்டுவரப்பட்டது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பணகுடியில் உள்ள மயானத்தில் உதயகுமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது சப்-இன்ஸ்பெக்டர் பிரதீப் ஆகியோர் உயிரிழந்த காவலரின் உடலை சுமந்து சென்றுள்ளனர். மேலும், எல்லைப் பாதுகாப்புப் படையை சேர்ந்த வீரர்கள், உயிர் இழந்த உதயகுமார் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர். அதன்பின் அவர் மீது போர்த்தப்படும் இந்த தேசியக் கொடியானது அவர் மகன் முத்தையா முரளியிடம் ஒப்படைக்கப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…